Monday, August 31, 2009
பிருத்விராஜூடன் காதலா? ப்ரியாமணி பதில்!
சென்னை : பிருத்விராஜூடன் காதலா? என ப்ரியாமணியிடம் கேட்டால் ஒரு நீண்ட விளக்கமே கொடுத்து விடுகிறார். பிருத்வியின் அம்மாவும், என் அம்மாவும் பள்ளி நாட்களிலேயே நல்ல தோழிகள். அவர்களது நட்பினால் நானும், பிருத்விராஜூம் நெருங்கி பழகி வருகிறோம். எங்களுக்குள் இருப்பது வெறும் நட்புதான். காதல் அல்ல..! இருவரும் சத்யம் எனும் மலையாள படத்தில் நடித்தோம். கேரளாவில் ஹிட் ஆன இந்த படத்தை தொடர்ந்து சில படங்களில் இணைந்து நடித்தோம். இப்போது தமிழிலும் நினைத்தாலே இனிக்கும் படத்தில் ஜோடி சேர்ந்துள்ளோம். இதை வைத்து எங்களுக்குள் காதல் என கதை கட்டினால் எப்படி? என்று எதிர்கேள்வி கேட்கிறார் ப்ரியாமணி. ப்ரியாவின் கேள்வியிலும் நியாயம் இல்லாமல் இல்லை...! ஆனாலும் நெருப்பில்லாமல் புகையாதே? எனக் கேட்கின்றனர் விவரமறிந்தவர்கள். அதுவும் வாஸ்தவந்தான்!!
SOURCE : DINAMALAR
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment