Thursday, July 30, 2009
"கமலஹாசனுக்குப் பிறகு நான் தான்" - பிரித்திவ் ராஜ்
மலையாளத்தில் பிரித்திவ் ராஜ் நடித்த 'கிளாஸ்மேட்ஸ்' என்ற திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்த்து தமிழில் இப்படத்தை 'நினைத்தாலே இனிக்கும்' என்ற பெயரில் 'ரீமேக்' செய்கின்றனர்.
பிரித்திவ் ராஜ் மலையாளப் படமான 'கிளாஸ்மேட்ஸ்' இல் நடித்த கதாபாத்திரத்தையே தமிழிலும் நடிக்கிறார். "ஒரே கதாபாத்திரத்தை இரண்டு முறை நடிப்பதனால் சலிப்பு தட்டவில்லையா?" என்றதற்கு பிரித்திவின் பதில், "இதுவரை ஒரே கதாபாத்திரத்தை இரண்டு முறை வெவ்வேறு மொழிகளில் கமலஹாசன் அவர்கள் தான் 'அவ்வை சண்முகி' மூலம் நடித்திருக்கிறார். அவருக்குப் பிறகு நான் தான் அப்படி நடிக்கிறேன். இது சலிப்பு தட்டும் சமாச்சாரம் அல்ல; சந்தோஷப்பட வேண்டிய விஷயம்" என்கிறார். அது மட்டும் இன்றி முதல் முறையாக மூன்று வேடங்களில் 'ரகுபதி ராகவ ராஜாராம்' என்ற மலையாளப் படத்தில் நடிக்கவுள்ளாராம்.
மேலும் தான் நடித்துக்கொண்டிருக்கும் இயக்குநர் மணிரத்னத்தின் படம் வெளிவந்த பிறகு, தன்னை ஒரு அதிரடி நாயகனாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்கிறார்.
News From -
Subscribe to:
Post Comments (Atom)
he is equal to kamal in acting .....
ReplyDelete