Saturday, July 25, 2009

ராவணா படப்பிடிப்பு -மணிரத்னம் டென்ஷன்


டிஸ்சார்ஜ் ஆகும் போதே, "டென்ஷனை இங்கேயே விட்டுட்டு போங்க" என்று அட்வைஸ் பண்ணிதான் அனுப்பினார்கள் மருத்துவர்கள்.
ஆனால், படப்பிடிப்புக்கு போன பிறகு முதல் ஆளாக வந்து மேலே உட்கார்ந்து கொண்டது அந்த பாழாய் போன டென்ஷன்தான். மணிரத்னத்தை விடாமல் துரத்தும் இந்த டென்ஷக்கு முக்கியமான காரணம் பிரபல நடிகரின் கால்ஷீட் சொதப்பல்தானாம்.

அவ்ளோ பெரிய டைரக்டருக்கே அல்வா கொடுத்த நடிகர் யாரு? நம்ம கோவிந்தாதான். ராவணாவை இந்தியிலும், தமிழிலும் மாறி மாறி எடுத்து வருகிறார் மணிரத்னம். வேக வேகமாக சென்று கொண்டிருந்த படப்பிடிப்பு டைரக்டரின் உடல் நலக்குறைவு காரணமாக சில நாட்கள் நிறுத்தப்பட்டிருந்தது. மருத்துவர்கள் அட்வைசை மீறியும் உடனடியாக படப்பிடிப்புக்கு சென்றார் மணிரத்னம். இப்படத்தின் இந்தி போர்ஷனில் மிக முக்கிய கேரக்ரில் நடித்து வருகிறார் கோவிந்தா.

கடந்த ஷெட்யூல் படப்பிலேயே லேட்டாக வரத்துவங்கினாராம். அவரிடம் கோபித்துக் கொண்ட மணி, இப்போது ஊட்டிக்கு ஷிப்ட் ஆகியிருக்கிறார். இங்கே ஷ§ட்டிங் ஆரம்பித்து மூன்று நாட்கள் சொல்லாமல் கொள்ளாமல் ஆப்சென்ட் போட்டுவிட்டார் கோவிந்தா. இதன் காரணமாக அவருக்கு போன் போட்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்தினாராம் மணி. ஆனாலும், முன்னை போலவே இருக்கிறாராம் கோவிந்தா.

இந்த ராவணனை வழிக்கு கொண்டு வர, வானர படைகளைதான் அனுப்ப வேண்டும் போலிருக்கிறது.

Aazeek

No comments:

Post a Comment