Wednesday, July 29, 2009

நினைத்தாலே இனிக்கும் - ப்ரித்விராஜுக்கு ஒரு புதிய முகம்



கடந்த ஒரு வருடங்களாக தமிழ் ரசிகர்களுக்காக ப்ரித்விராஜின் படங்கள் ஏதும் வெளியாகாமல் இருந்தது.இதுவரையும் காதல்,காமெடி மற்றும் சோகம் என்று ஒரே பாணியில் தமிழில் நடித்துக்கொண்டிருந்த ப்ரித்வி தற்போது ஆக்சன்,த்ரில் என்று தனது புதிய முகத்தை தமிழ் ரசிகர்களுக்கு கட்டப்போகிறார் "நினைத்தாலே இனிக்கும்" படம் மூலமாக.

இது பற்றி பிரித்விராஜிடம் கேட்ட போது அவர் கூறியது 'மலையாளத்தில் 50 படம் பண்ணிருக்கின்றேன் அதில ஆக்சன் படம் தான் அதிகம்.மலையாளத்தில் ஆக்சன் படங்கள் பண்ணி பண்ணி இனி முடியாமல் தான் தமிழ்ல இப்படியான படங்கள் பண்ணினேன்,ஆனா "நினைத்தாலே இனிக்கும்" நான் இது வரைக்கும் தமிழ்ல பண்ணின பாடங்களில் இருந்து வேறுபட்டு இருக்கும்'என்றார்.

தற்போது மலையாளத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஆக்சன் படம் "புதிய முகம்" ப்ரித்விராஜை அடுத்த சூப்பர் ஸ்டார் (மலையாளம்) என்று ரசிகர்கள் மத்தியில் உறுதியாக கூறும் அளவுக்கு பெயர் வாங்கி கொடுத்திரிக்கின்றது.வரும் ஆகஸ்ட் 2 ஆம் திகதி வெளியாக இருக்கும் "நினைத்தாலே இனிக்கும்" தமிழ் ரசிகர்களுக்கு ப்ரித்விராஜின் ஒரு புதிய முகம் என்று சொல்லலாம்.

Aazeek

No comments:

Post a Comment