Saturday, October 31, 2009

மணிரத்னம் கொடுத்த பார்ட்டி

பார்ட்டி கொடுப்பதில் மணிரத்னம், சுஹாசினி தம்பதி பெயர் போனவர்கள். நின்றால், நடந்தால், எழுந்தால் என்று அனைத்துக்கும் பார்ட்டிதான்.

சமீபத்தில் மெகா பார்ட்டி ஒன்றை இந்த தம்பதி நெருக்கமானவர்களுக்கு மட்டும் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் ராவண் படத்தில் நடித்த அனைவரும் கலந்து கொண்டனர்.

படத்துக்கு பூஜை போடுவது, பூசணிக்காய் உடைப்பது போன்ற சம்பிரதாயங்களை ஒருபோதும் மணிரத்னம் கடைபிடிப்பதில்லை. படம் முடிந்தால் மற்றவர்கள் பூசணிக்காய் உடைப்பார்கள். மணிரத்னம் கொஞ்சம் வித்தியாசம். படத்தில் பணியாற்றியவர்களை அழைத்து பார்ட்டி கொடுப்பார்.

சமீபத்தில் நடந்த பார்ட்டி ராவண் படப்பிடிப்பு முடிந்ததற்காம். அப்படீன்னா பொங்கலுக்கு படத்தை எதிர்பார்க்கலாமா சார்?

Aazeek

No comments:

Post a Comment