Thursday, July 1, 2010

மணிரத்னம் செய்தது சரியா? எழுத்தாளர் ஞாநி ஆவேசம்!


ஆகாத புள்ளைக்கு அங்கங்க சூடுங்கிற மாதிரி, மணிரத்னத்தை உலுக்க ஆரம்பித்திருக்கிறது மீடியாவும் விமர்சனங்களும். இந்த நேரத்தில் தனது பங்குக்கும் ஒரு கல்லை போட்டிருக்கிறார் எழுத்தாளர் ஞாநி. இந்த படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்க வேண்டும் என்று மணிரத்னத்தின் உதவியாளர் எஸ்.எஸ்.ஸ்டான்லி என்பவர் தன்னை அழைத்ததாக குறிப்பிட்டிருக்கிறார் ஞாநி. (சினிமாவில் பல முன்னணி தயாரிப்பாளர்களுக்கு சமாதி கட்டிவிட்டு கடைசியில் இந்த நபர் போய் சேர்ந்த இடம்தான் மெட்ராஸ் டாக்கீஸ். லெக் தாதாவின் வீரியம் இப்போ புரிஞ்சுருக்குமே?) நேரில் போனவரிடம் தனது ஆசையை தெரிவித்தாராம் மணிரத்னம்.

தனது இமேஜுக்கு பங்கம் நிகழாத கேரக்டராக இருந்தால் நடிப்பதாக கூறிய ஞாநி, கொல்கத்தாவுக்கு சில முறை விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டாராம். நாள் கணக்கில் காத்திருந்து இவர் நடித்த காட்சிகள் எதுவும் படத்தில் வரவேயில்லை. அதுமட்டுமல்ல, உங்களை இந்த மாதம் அழைக்கிறோம். தயாராக இருங்கள் என்று மாதத்திற்கு ஒரு முறையாவது சொன்ன மணிரத்னம் யூனிட் அதன்பின் தன்னை அழைக்கவே இல்லை என்கிறார் ஞாநி. மனித நாகரிகத்தை மனதில் கொண்டாவது நீங்கள் இந்த படத்தில் இல்லை என்று சொல்லியிருக்கலாம். அது கூட தெரியாதவராக இருக்கிறார் என்று மணிரத்னத்தை சாடியிருக்கிறார் தனது கட்டுரையில்.

இவரை போலவே கொல்கத்தாவுக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டு கடைசியில் படத்தில் காணாமல் பலர் கோடம்பாக்கத்தில் புலம்பிக் கொண்டிருப்பது தனிக்கதை!

Source : http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2010/july/010710b.asp

......................................................................................
Join Here : http://www.orkut.com/Main#Community?cmm=6136651 [Official Orkut Community of Prithviraj]

Latest Updates : http://twitter.com/PrithviNews

Follow Us : http://twitter.com/PrithvirajBlog
......................................................................................

No comments:

Post a Comment