Saturday, September 5, 2009

தடையில்லா ராவணா : உற்சாகத்தில் சந்தோஷ் சிவன்


தளபதி படத்துக்கு பிறகு டைரக்டர் மணிரத்னம் ராவணா படத்தின் மூலம் இணைந்திருப்பவர் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் ஜோடி நடிக்கும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் மலைப்பிரதேசங்களில்தான் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது மும்பையில் உள்ள மால்ஸ்ஹெஜ் மலைதொடர்ச்சியில் நடைபெற்று வருகிறது. இயற்கை சூழ்ந்த மலைப்பகுதியில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் உற்சாகத்துடன் பணியாற்றி வருகிறார். இதுபற்றி சந்தோஷ் சிவன் அளித்துள்ள பேட்டியில், பொதுவாக மலைப்பகுதியில் சூட்டிங் நடத்தும்போது திடீர் திடீரென மழை பெய்யும். அதனால் சூட்டிங்கும் தடைபடும். ஆனால் ராவணா படத்தை பொறுத்தவரை மழை பெய்தாலும், மேக மூட்டம் அதிகமானாலும் சூட்டிங்கை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம். இயற்கையான சூழ்நிலையில், இயற்கை அழகுடன் படமாக்கி வருகிறோம். டைரக்டர் மணிரத்னம் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார். ராவணா சூட்டிங்கில் உண்மையிலேயே என்ஜாய் பண்ணுகிறோம், என்று கூறியுள்ளார். ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவம் இதற்கு முன்பு பிபோர் தி ரெய்ன் என்ற படத்தினை இயக்கியிருந்தார். ஆங்கில நடிகர்கள் லீனஸ், ராகுல்போஸ் மற்றும் நடிகை நந்திதா தாஸ் நடித்திருந்த இந்த படம் பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளதுடன், ஏராளமான திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Aazeek

No comments:

Post a Comment