தேசிய விருது பெற்ற மலையாள இயக்குனர் லோகிததாஸின் திடீர் மரணம்
கேரள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள பட இயக்குனர் லோகிததாஸ் 'சூத்தரகாரி', 'சக்கரமுத்து', 'பூதக்கண்ணாடி' உட்பட பல்வேறு படங்களை இயக்கி இருக்கிறார். தமிழில் 'கஸ்தூரிமான்' படத்தை இயக்கியுள்ளார். இவருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பலனின்றி மரணம் அடைந்தார்.
இதே நேரத்தில் கொச்சினில் கேரளா நடிகர் சங்கத்தில் பொதுக்குழு கூட்டம் நடந்து கொண்டிருந்தது. லோகிததாஸ் மரணச்செய்தி கிடைத்தவுடன் கூட்டம் ரத்து செய்யப்பட்டு, அங்கிருந்த மம்மூட்டி,மோகன்லால்,ப்ரித்விராஜ் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இவர் ப்ரித்விரஜை வைத்து தமிழில் ஒரு படத்தை இயக்கவிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
Aazeek
Get Blogger Falling Objects
No comments:
Post a Comment