Friday, June 26, 2009

சிறந்த நண்பர்கள்..... சியான்,அபி ,ப்ரித்வி மற்றும் ஐஸ்.....


பல பிரச்சினைகளுக்கு மத்தியில் மணிரத்னம் இயக்கி வரும் அசோகவனத்தில் விக்ரம்,அபிஷேக் பச்சன்,ப்ரித்விராஜ் மற்றும் ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

மணிரத்னம் சில நாட்களாக சுகவீனம் உட்டிருந்தமை,படப்பிடுப்புக்காக இலங்கை அரசின் அனுமதியை எதிர்பர்த்திருந்தமை மற்றும் ஊட்டி படப்பிடிப்பின் போது கேரவேன் பறிமுதல் என பல பிரச்சினைகள் தொடர்ந்து வந்ததால் அசோகவனத்தின் படபிடுப்புக்கள் தாமதமாகியுள்ளது.

காமேராமன் சந்தோஸ் சிவனிட்குப் பதிலாக மணிகண்டன் மாற்றப் பட்டதால் மீள் படபிடிப்பு செய்யப்பட்டது அனைவரும் அறிந்த விடயம்.தங்களுக்கான கால்சீட் முடிந்த நிலையிலும் தற்போதும் மணியின் நிலையை புரிந்து கொண்டு விக்ரம்,அபிஷேக் பச்சன்,ப்ரித்விராஜ் மற்றும் ஐஸ்வர்யாராய் தங்களது பங்களிப்பை அளித்துவருகின்றனர்.

இத்தனை பிரச்சினைக்கு மத்தியிலும் ஒரு நல்ல விடயம் சியான்,அபி ,ப்ரித்வி மற்றும் ஐஸ் சிறந்த நண்பர்கள் ஆகிவிட்டார்கள்.படப்பிடுப்பு தவிர்ந்த நேரத்தில் ஒன்றாக சேர்ந்து சாப்பிடுவதும்,நகைச்சுவையும் சிரிப்புமாய்யுள்ளனராம்.

மீள் படபிடிப்பு காரணமாக உலக நாயகன் கமலுடன் ப்ரித்விராஜ் தி 19 ஸ்டேப்சில் கைகோர்க்க முடியாத நிலையில் உள்ளார்.

எதிர் பார்ப்போம் அசோகவனத்தை.....

Aazeek

No comments:

Post a Comment