Saturday, June 13, 2009

ஊட்டியில் ஒரு டூயட் பாடல்...


மணிரத்னத்தின் இயக்கத்தில் மிகப் பிரமாண்டமாக தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தியில் உருவகிக்கொண்டிருக்கும் படமே "அசோகவனம்\ராவணா" ஆகும்.இத் திரைபடத்திற்கு தமிழில் "அசோகவனம்" என்றும் ஹிந்தி மற்றும் தெலுங்கில் "ராவணா" என்றும் பெயர் சூட்டியுள்ளனர்.

இதில் தமிழ் பிரிவில் விக்ரம்,ப்ரித்விராஜ்,ஐஸ்வர்யாராய்,கார்த்திக்,சுஹாசினி மணிரத்னம் மற்றும் வையாபுரி ஆகியோர் நடித்து வருகின்றனர்.மணிரத்னத்தின் சுகவீனதிற்கு பிறகு தற்போது ஊட்டியில் இதற்கான படப்பிடிப்புக்கள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்க விடயம்.

அங்கு பாடல் காட்சிகளே படமாக்கப்படுகின்றது.தமிழ் பிரிவுக்காக ப்ரித்விராஜ், ஐஸ்வர்யாராய் சம்பந்தப்பட்ட பாடல் காட்சியும்,ஹிந்தி பிரிவுக்காக விக்ரம்,ஐஸ்வர்யாராய் சம்பந்தப்பட்ட பாடல் காட்சியும் படமாக்கப்பட்டு வருகின்றன.

ஆஸ்கார் நாயகன் AR ரஹ்மானின் இசையில் 6 பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

Aazeek

No comments:

Post a Comment