Monday, May 11, 2009

சிறீலங்கா அரசின் அனுமதிக்கு காத்திருக்கிறார் மணிரத்னம்


தமிழ், இந்தியில் மணிரத்னம் இயக்கும் 'ராவண்' பட ஷுட்டிங் சிறீலங்காவில் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு ஷுட்டிங் நடத்த அனுமதி கேட்டு காத்திருக்கிறார் மணிரத்னம்.

இதில் தமிழில் விக்ரம்,பிருதிவிராஜ்,ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார்கள். இந்தியில் ஐஸ்வர்யாவுடன் அபிஷேக் பச்சன் நடிக்கிறார். ராமாயணம் கதையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. ரான் கேரக்டரில் பிருதிவிராஜ் நடிக்,ராவணன் கேரக்டரில் விக்ரம் நடிக்கிறார்.அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை சிறீலங்காவிலுள்ள 'லங்காபுரா' தீவில் படமாக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளார். இதற்காக அந்நாட்டு அரசின் அனுமதிக்காக அவர் காத்திருக்கிறார்.

இதற்கிடையே நெஞ்சுவலி ஏற்பட்டு கடந்த மாதம் ஆஸ்பத்திரியில் மணிரத்னம் அனுமதிக்கப்பட்டார். இப்போது அவர் குணமடைந்து வருகிறார். தேர்தலுக்கு பின் கொல்கத்தாவில் ஷுட்டிங் நடத்த உள்ளார். அதன்பின் சிறீலங்காவில் ஷுட்டிங் நடத்த அவருக்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Aazeekmovies

No comments:

Post a Comment